Friday 19 September 2014

தென்குமரியின் கதை
யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை, டிசம்பர் 2003.
ரூ.180, பக். 336, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை 2003இல் வெளிவந்த சிறந்த நூலுக்கான விருது பெற்ற நூல். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டுகளின் வரலாற்று சமூக விடுதலை வரலாற்றை விரிவாக கூறும் நூல். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முன்னுரை, ஆசிரியர் உரை கூடியது. ஆய் அண்டிரன் முதல் 1956 வரை என்னும் முதல் பகுதியில் ஆய் அரசர், பாண்டியர், சோழர், விஜயநகர அரசு, வேணாட்டரசு, திருவிதாங்கூர் அரசு விடுதலைக்குப் பின் உள்ள வரலாறு கூறப்படுகிறது. தேசிய சமூக விடுதலை பகுதியில் தென்குமரியில் நடந்த அடிமை விடுதலை, மேலாடைக் கலகம், கோவில் நுழைவு, சுதந்திரப்போராட்ட செய்திகள் உள்ளன. மதங்களும் பங்களிப்பும் என்னும் பகுதியில் சைவ, வைணவ, சமண, புத்த, கிறுஸ்தவ, இஸ்லாமிய கோவில்கள் பற்றியும் அய்யா வைகுண்டர் பற்றியும் செய்திகள் உள்ளன. கல்வி கலைகள் என்னும் இறுதிப்பகுதியில் தென் குமரியின் கல்வி, மருத்துவப்பணி, விழா, படைப்பாளிகள், கலைகள் பற்றிய செய்திகள் உள்ளன. இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான நூற்களின் நீண்ட பட்டியல் உள்ளது. 80 அரிய படங்களும் உள்ளன.
            இந்நூல் வெளியான சில மாதங்களிலேயே 1000 பிரதிகள் விற்பனை ஆயின. இந்நூல் பற்றி தினமணி பத்திரிகை (17.06.2014) மிக ஆழமான வாசிப்பறிவும் கடினமான உழைப்பும் விரிவான கள ஆய்வும் கொண்ட நூல் இது என்று முன்னுரையில் நாஞ்சில்நாடன் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானதேஎன விமர்சிக்கிறது.


No comments:

Post a Comment