Friday 29 August 2014

The Scorching Guile (.)

(தம்பிமார் கதை) சக ஆசிரியர் கே. ஜெயக்குமார்
Institiue of Asian Studies, Chennai, Dec 1999. 
ரூ. 300, பக். 316, டபிள் கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            தம்பிமார் கதை என்ற வில்லிசைப்பாடலின் தமிழ் பதிப்பு; ஆங்கில மொழிபெயர்ப்பு. பதிப்புரை தம்பிமார் கோவில் குறிப்பு ஆய்வுரை, வலிய தம்பி குஞ்சு தம்பி கதைச் சுருக்கம் ஆகிய கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் 72 பக்கங்களில் உள்ளன. 2000க்கு மேற்பட்ட வரிகள் கொண்ட இக்கதைப் பாடலில் தமிழ் வடிவம், ஆங்கில வடிவப் பெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, விரிவான குறிப்புகள் கொண்டது
           பின்னிணைப்பில் Glossary, சொல்லடைவு, துணை நூல் பட்டியல், ஊர் பெயர் அகராதி, வழக்கு சொல் அகராதி, மாடம்பி கதைப் பாடல், தம்பிமார் கதையை வில்லிசைக் கலைவழிப் பாடும் கலைஞர்களின் பட்டியல் ஆகியன உள்ளன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பேரா. சுப்பிரமணியம் செய்திருக்கிறார்.
குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும் கலைஞரும்

சக ஆசிரியர் தெ.வேஜெகதீசன்வருண் பதிப்பகம்நாகர்கோவில்; 1999.
ரூ. 25, பக். 80, டெம்மி அளவுஅச்சில் இல்லை.

          குமரி மாவட்டத்தில் வழக்கில் இருந்த கட்சிப்பாட்டு, கண்ணன் ஆட்டம், கதை வாசிப்பு, களம் எழுத்தும் பாட்டும், கழியலாட்டம், சிலம்பாட்டம், தோல்பாவைக்கூத்து, நையாண்டி மேளம், போட்டி வேதக்கதைப்பாடல், வில்லுப்பாட்டு என 10 கலைகள் பற்றிய கட்டுரைகள் முதல் பகுதி. இரண்டாம் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்கின்ற 600க்கு மேற்பட்ட கலைஞர்களின் முகவரிகள்.
            இந்நூல் பற்றி தினமணியில் (26.8.1999) சீனி குலசேகரன் நீண்ட விமர்சனம் எழுதியுள்ளார்.தென் மாவட்ட நாட்டார் கலைஞர்களின் முகவரிகள் பட்டியல் உள்ளது; சிறப்பானது.
முல்லைப்பாட்டு 
(உரையும் விளக்கமும்)

உமா பதிப்பகம், சென்னை. டிசம்பர் 1998.
ரூ. 5, பக். 32, அச்சில் இல்லை.

            சங்க இலக்கியமான முல்லைபாட்டிற்கு மிக எளிய உரை. முகவுரை உண்டு.

வில்லுப்பாட்டுப் புராணக் கதைகள்

வருண் பதிப்பகம், நாகர்கோவில், மார்ச் 1998.
ரூ. 18, பக். 94, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            சாத்தாகதை முத்தாரம்மன் கதை, பிரம்மகத்தி அம்மன் கதை, பலவேசக்காரன் கதை, சுடலைமாட சாமி கதை, இயக்கியம்மன் கதை, நீலசாமி கதை, பூதங்களின் கதை, மன்னன் கருங்காலி கதை, பெருமாள்சாமி கதை, மார்க்கண்டன் கதை, காலசாமி கதை ஆக 12 கதைகள். இவை அம்மானைப் பாடல் வடிவில் இருந்தவை. இவற்றில் 5 கதைப்பாடல்கள் அச்சில் வந்தவை. பிற ஏட்டு வடிவில் இருப்பவை. சாதாரண வாசகன் புரிந்துகொள்ள உரைநடை வடிவில் சுருக்கப்பட்டவை. 11 பக்க முகவுரை உண்டு.
தோல்பாவைக்கூத்து

வருண் பதிப்பகம், நாகர்கோவில், ஜனவரி 1996.
ரூ. 40, பக் 192, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            தோல்பாவைக்கூத்து அறிமுகம், மண்டிகரும் தோல்பாவைக்கூத்தும், தோல்பாவைக்கூத்தில் தமாஷ் காட்சிகள் ஆகிய கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பு 18 தலைப்புகளில் அமைந்தது. நல்லதங்காள் கதை நிகழ்ச்சி முழுதும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மண்டிகரும் தோல்பாவைக்கூத்தும் என்ற தலைப்பில் உள்ள செய்திகள் தோல்பாவைக்கூத்து கலைஞர்களான கலைமாமணி பரமசிவராவ், ராமச்சந்திரராவ், சுப்பையாராவ், கோமதி ஆகியோருடன் உரையாடியபோது கிடைத்த தகவல்கள். இது முழுக்க வாய்மொழித் தகவல்கள்.
            இந்நூல் குறித்து ஆங்கில இந்து நாளிதழ் விரிவான விமர்சனம் வெளியிட்டிருந்தது. (26.01.1999) எழுதியவர் எஸ்கோபாலி
            The authors passion for collecting and presenting authentic information on rare subjects is evident from his earlier publications.

            The book falls short of a research thesis, but is not in a popular style meant for the lay reader. It is not totally academic and fails to emerge as an informal guide book for the common man on this art form.