Wednesday 24 September 2014

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் 

(மகாபாரதம் பற்றிய நாட்டார் கதைகள்)

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
டிசம்பர் 2012. ரூ. 175, பக் 223, டெம்மி அளவு.

            மகாபாரதம் தொடர்பான கதைகள், அம்மானை வடிவில் அமைந்ததன் உரைநடை வடிவம், புகழேந்தி புலவர் பெயரில் உள்ளவை. நீண்ட முகவுரை உண்டு. இந்நூலில் அல்லி அரசாணி மாலை, புலந்தரன் களவு மாலை, பவளக்கொடி மாலை, அலிமன்னன் சுந்தரிமாலை, ஆரவல்லி ஆரவல்லி கதை, ஏணியேற்றம், பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதை குறம், திரௌபதை அம்மானை, மின்னொளியான் குறம், வித்துவான் குறம், பொன்னுருவி மசக்கை, கர்ண மகாராசன், கன்னட மக்கள் கதை, அரவான் கதை ஆகிய இக்கதைகள் முழுவதும் பாரதத்திலிருந்து வேறுபட்டவை. இந்நூலில் மிகப் பழைய 80 படங்கள் உண்டு.

தென்குமரியின் சரித்திரம்

சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். செப்டம்பர் 2012, 2013.
ரூ. 75, 
            தென்குமரியின் கதை நூலின் சுருக்கப்பதிப்பு. 11இயல்கள், முகவுரை, டாக்டர் தெ. வேலப்பனின் அணிந்துரை உண்டு. 143 அபூர்வமான படங்களும் 2 வரைபடங்களும் உள்ளன.
உணவுப் பண்பாடு

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஏப்ரல் 2012.
ரூ. 115, பக். 180, டெம்மி அளவு.

            இந்நூலில் உள்ள கட்டுரைகள் உங்கள் நூலகம், மலையாள மனோரமா இயர்புக் (தமிழ்) பனுவல் சாளரம். காலச்சுவடு ஆகிய இதழ்களில் வந்தவை. பதிப்புரை, நன்றியுரை நீங்க 9 கட்டுரைகள். அவை உணவுப் பண்பாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், நிலைத்த பனுவலும், நிகழ்த்துதல் மறுவலும், தமிழகத்தில் விழாக்கள், கிறுத்தவ விழாக்கள், இசுலாமிய விழாக்கள், ஆண்டாளும் ஆமுக்தமால்யதவும், குலசேகர ஆழ்வாரின் காலம், நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் (கதைப் பாடல்களை முன்வைத்து) ஆகியன. எல்லாமே ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

காலந்தோறும் தொன்மம்

தமிழினி, சென்னை, டிசம்பர் 11.
ரூ. 90, பக். 143, டெம்மி அளவு.

           வல்லினம், உங்கள் நூலகம், காலச்சுவடு, ஒளிவெள்ளம், திணை என சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. பழம் புராணங்களில் பொதிந்த தொன்மம் காலந்தோறும் நினைக்கப்படுகிறது; இலக்கியங்களில் மையம் கொள்கிறது என்பது மையம். இந்நூலில் அகலிகை கதை நப்பண்ணனார் முதல் புதுமைப்பித்தன் வரை, நந்தனார் அக்கினிப் பிரவேசம், பிள்ளையைக்கொன்ற பாட்டு, சிலப்பதிகாரமும் கோவலன் கதைகளும், கைசிக நாடகம் என 5 கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பில் 12 பழம் தொன்மக்கதைகளும் பிள்ளைக்கறி மருந்துப்பட்டியலும், புகழேந்திப்புலவரின் கோவலன் அம்மானைச் சுருக்கமும் 9 பழைய படங்களும் உள்ளன.

சிவாலய ஓட்டம்

காலச்சுவடு பதிப்பகம், நவம்பர் 2011.
ரூ. 199, பக். 248, டெம்மி அளவு.

            கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழாவன்று பன்னிரு சிவாலயங்களுக்கு ஓடிச்செல்லும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இக்கோவில்கள் இருக்கும் ஊர்கள் முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பள்ளிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகியன. இங்குள்ள சிவன் கோவில்களின் வரலாற்றை வழக்காறு, கல்வெட்டுகள் அடிப்படையில் கூறுவது இந்நூல். இக்கோவில்கள் தொடர்பான கதைகளும் உள்ளன. 24 பின்னிணைப்புகள் உள்ளன. இவை கோவில் தொடர்பான கல்வெட்டுகள், புராணம் தொடர்பான, சிவன் கோவில்களுக்குச் செல்வது தொடர்பான வழக்காறுகள் ஆகியனவாம். இதில் 138 படங்கள் உள்ளன.

இராமன் எத்தனை இராமனடி

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் 2010.
ரூ. 175, பக். 232, டெம்மி அளவு.

                    இராமாயணம் தொடர்பான நாட்டார் கதைகள், அவை குறித்த விமர்சனம், இந்நூலில் 2 பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் இராமன் எத்த இராமனடி, ஜைன ராமாயணம், தோல்பாவைக்கூத்தில் ராமாயணம், இராமாயணத் தோல்பாவைக்கூத்து, இராம கீர்த்தனம், சூர்பநகையின் பரிதாபம், தக்கை ராமாயணம் ஆக எட்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியில் ஒரே இலையில் அனுமனும் இராமனும் சாப்பிட்ட கதை உட்பட 117 கதைகள் உள்ளன. பின்னிணைப்பில் இராமாயணச் சிற்பங்கள் பட்டியல், இராமாயணக் கதையில் வரும் புராணங்கள் பட்டியல், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் இராமாயணப் பட்டியல் போன்றன உள்ளன. இந்நூலில் நாட்டார் இராமாயணம் தொடர்பான 122 பழைய படங்கள் உள்ளன.

சடங்கில் கரைந்த கலைகள்

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், நவம்பர் 2009,  அக்டோபர் 2010.
ரூ. 140, பக். 184, டெம்மி அளவு.

            நாட்டார் தெய்வ விழா, சடங்குகள் தொடர்பான கலைகள் குறித்த நூல். இத்தகு கலைகள் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், கண்ணன் விளையாட்டு, களம் எழுத்தும் பாட்டும் ஆகியன. இவை பற்றி விளக்கும் நூல். பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை முகவுரை உண்டு. பின்னிணைப்பில் 11 தலைப்புகள் உள்ளன. 52 படங்களும் உண்டு.