Friday 19 September 2014

கவிமணியின் கவிதைகள் (ப.ஆ.
(முழுதும் அடங்கிய ஆய்வுப் பதிப்பு)
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், நவம்பர், 2002.
ரூ. 300, பக். 670, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதிய மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர்கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனங்கள் ஆகியவை அடங்கிய ஒரே முதல் தொகுப்பு. ஏற்கெனவே வெளிவந்த மலரும் மாலையும் தொகுப்பில் இல்லாத 119 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. அதோடு மலரும் மாலையும் தொகுப்பில் 196 அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மருமக்கள் வழி மான்மியத்தில் 300க்கு மேல் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
            இந்நூலில் முகவுரை சுந்தர மூர்த்தியின் அணிந்துரை, தே. வேலப்பனின் ஆய்வுரை, நன்றியுரை ஆகியவையும் 17 பின்னிணைப்புகளும் உண்டு. பின்னிணைப்பில் அடிக்குறிப்புகள்; வையாபுரிப் பிள்ளையின் முகவுரை, கவிமணி குறித்த மலர்கள், இதழ்கள், நூல்கள் பட்டியல், கவிமணியின் வாழ்க்கை குறிப்புகள், பாடல், முதல் குறிப்பு, அகரவரிசை ஆகியன உள்ளன. கவிமணியின் அரிய 25 படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
            இந்நூல் பற்றி Hindu பத்திரிகையில் (14.10.2003) ஜே. பார்த்த சாரதி விரிவான விமர்சனம் எழுதியிருந்தார். அது பின்வருமாறு,

            The editor have taken pains to search out hither to unpublished poems numbering 119 from journals and manuscripts and added to his output shown in this book. He have also done a good job of textual criticism noting down variations between the texts as published and the manuscripts of the poet and also adding explanatory footnotes…



No comments:

Post a Comment