Wednesday 24 September 2014

கவிமணியின் கட்டுரைகள் (ப.ஆ.)
தமிழினி, சென்னை, 2004.
ரூ. 70, பக். 160, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் கட்டுரைகள் அடங்கிய முதல் பதிப்பு. கவிமணியின் கட்டுரைகளைப் பாரி நிலையம் கவிமணியின் உரைமணிகள்என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தனர் (1954). 2003வரை அவர்கள் வெளியிட்ட பதிப்பு ஒரே மாதிரியாக இருந்தது. தமிழினியின் இப்பதிப்பில் புதிதாக மனோன்மணியத்தின் மறுபிறப்பு, ஓர் தமிழ்ப் பெரியாரின் மறைவு, தண்டமிழ் மேதை ம.பொ.சி., வருங்கால அரசியல் மொழி ஆகிய நான்கு கட்டுரைகளும், தினமணி பேட்டி ஒன்றும் (11.8.1954) சுந்தர ராமசாமி கவிமணியைப் பேட்டி கண்டு எழுதிய கட்டுரை ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர அசலாம்பிகை அம்மையாரின் இராமலிங்க சாமி சரிதம் என்னும் புத்தகத்தின் விமர்சனம் இந்நூலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் பதிப்பாசிரியரின் முகவுரை, கவிமணியின் வாழ்க்கைக் குறிப்பு, கவிமணி எழுதிய நூற்களின் பட்டியல், கவிமணியின் அரிய 9 புகைப்படங்கள் ஆகியனவும் இந்நூலில் உள்ளன.

No comments:

Post a Comment