Friday 15 August 2014

தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியின் கணிப்பு

 க்ரியா, சென்னை, 1983, ஜூன் 19.
ரூ. 6, பக். 64, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி பல்வேறு நூற்களில் கூறிய கருத்துக்களைத் தொகுத்துத் தருவது. நூலாசிரியரின் முகவுரை, வித்துவான் மு. சண்முகம்பிள்னையின் அணிந்துரை ஆகியனவும் பின்னிணைப்பில் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பும், எஸ்.வி. எழுதிய புத்தகங்கள், கட்டுரைகளின் பட்டியலும் உள்ளன.
            எஸ்.வி.யின் தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி சாதாரண வாசகனும், மாணவனும் அறிய எளிமையாக எழுதப்பட்ட கையேடு போன்ற நூல்.
            Indian Express பத்திரிகை இந் நூல் பற்றிய விரிவான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. (27.02.1985) இதை எழுதியவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி “… Arguments have been clearly marshalled for daling these literary works. A long list of mr. pillai & work and contribalions to Journals has been appended. The author has done a commendable job in restruction mr. Pillai & fame as a giant among researches.”

No comments:

Post a Comment