சுண்ணாம்பு கேட்ட இசக்கி
கள ஆய்வு அனுபவங்களின் தொகுப்பு. 1980 முதல்
2005 வரை பல்வேறு இடங்களில் விழாக்களில் நடத்திய கள ஆய்வு அனுபவம்,
முறைப்படி இல்லாமல் சென்றபோது கிடைத்த அனுபவம். 18 தலைப்புகளில் உள்ள நூல். பின்னிணைப்பில் ஆய்வு நாகரிகம்
சொல் புதிது இதழுக்கு அளித்த பேட்டி இரண்டும் உள்ளன.
முகவுரை, நன்றியுரை, முனைவர் இராமச்சந்திரனின்
அணிந்துரை என அமைந்தது. இந்த நூலில் பெரும்பாலானவை தோல்பாவைக்கூத்து
பற்றிய செய்திகள் உள்ளன.
இந்நூலைப் படித்துவிட்டு நாட்டார் வழக்காற்றியல் அறிஞரும் தமிழகத்தில்
களஆய்வு செய்தவருமான எவலின் மாசிலாமணி மேயர், “உங்கள் அனுபவத்தில் பொதுவான உண்மை இழையோடுகிறது,
மனிதர்களிடம் கொண்டுள்ள அன்பும் வெளிப்படுகிறது. இதன் சில பகுதிகளை நான் பிரஞ்ச்,
ஜெர்மனியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்து விட்டேன்” என்றார்.
இந்நூலில்
உள்ள கட்டுரைகள் காலச்சுவடு, ஒளிவெள்ளம், சொல்புதிது, கைவிளக்கு, கன்னியாகுமரி,
குமுதம், குமுதம் தீராநதி, புதுமைத்தாய், தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில்
வந்தவை.
இந்நூல்
குறித்து தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் விரிவான விமர்சனங்களை
வெளியிட்டிருந்தன. (பிப்ரவரி 2007)
No comments:
Post a Comment