Wednesday 24 September 2014

நாஞ்சில் நாட்டு 

மருமக்கள்வழி மான்மியம் (ப.ஆ.)

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 
டிசம்பர் 2008, ஆகஸ்ட் 2010.
ரூ. 180, பக். 248, டெம்மி அளவு.
            கவிமணி எழுதிய மருமக்கள் வழி மான்மியத்தின் பதிப்பு. மான்மியம் முன்பு பாரிநிலையத்தால் பதிப்பிக்கப்பட்டது; மான்மியம் முதல்பதிப்பு 1942இல் வந்தது. பாரிநிலையம் கவிமணியின் நூற்களை வெளியிட உரிமை பெற்ற பின்பு 1953இல் மான்மியத்தை வெளியிட்டது. அப்போது 248 அடிக்குறிப்புகள் இருந்தன. இவற்றில் 12 அடிக்குறிப்புகள் தவறானவை. பாரி நிலையப் பதிப்பு எந்த மாற்றமும் இன்றி அப்படியே வந்தது. இந்தப் பதிப்பில் (காலச்சுவடு) தான் முதல் முதலாக 498 அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டன. மருமக்கள்வழி குறித்த விரிவான (47 பக்கம்) கட்டுரை இப்பதிப்பில் உண்டு. மான்மியம் வெளிவந்தபோது தமிழன் பத்திரிகை ஆசிரியர் எழுதிய (1916) அறிமுக உரை முதன்முதலாக இந்த மான்மியப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

            இப்பதிப்பின் பின்னிணைப்பில் மருமக்கள் வழி தொடர்பாக கவிமணி எழுதிய 37 பாடல்கள், மான்மியத்தின் பா வடிவம், கவிமணியின் வாழ்க்கை குறிப்பு, கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் குறித்த ஆங்கிலக் கட்டுரை, மான்மிய ஒழிப்பிற்கு முன்னின்றவர்களின் பெயர்கள், மான்மிய ஒழிப்புக் கூட்டம் பற்றிய நாள் குறிப்புச் செய்தி (1921) ஆகியனவும் கவிமணி, மான்மியம் ஒழிப்பு தொடர்பான அரிய படங்கள் ஆகியன உள்ளன.

No comments:

Post a Comment